- அன்னை சிவகாமி நகர்
- எண்ணூர்
- திருவொற்றியூர்
- ஏனூர் ஆஞ்சநேயர் சிவகாமி நகர்
- 3 வது வார்டு
- திருவொட்டியூர் மண்டல். ...
- ஏனூர் ஆஞ்சநேயர் சிவகாமி நகர்
- தின மலர்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர் அன்னை சிவகாமி நகர் அருகே மழைநீர் தேங்கும் குளம் உள்ளது. இந்த குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து சேறும், சகதியுமாக காணப்பட்டதால், மழைநீர் தேங்கி வீணாகும் நிலை இருந்தது. இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி திமுக கவுன்சிலர் தமிழரசன் (எ) தம்பியா, சென்னை மாநகராட்சிக்கும், பொதுநல அமைப்பிற்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி `ஹேண்ட் இன் ஹேண்ட்’ என்ற தொண்டு நிறுவனம் இந்த மழைநீர் சேமிப்பு குளத்தை தூர்வாரி சீரமைக்க முன் வந்தது.
அதன்படி, 530 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலம் கொண்ட இந்த மழைநீர் சேமிப்பு குளத்தை ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, குளத்தை சுற்றி கரை அமைத்து செடிகள் வளர்க்கவும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கவுன்சிலர் தமிழரசன் (எ) தம்பியா, பொதுநல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மழைநீர் சேமிப்பு குளத்தை விரைவாகவும், தரமானதாகவும் சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட `ஹேண்ட் இன் ஹேண்ட்’ நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
The post எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.14 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணி: விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.